Tuesday, March 16, 2010

தமிழனின் பாரம்பரிய உணவு கம்மங்கூழ்...


இந்த வருடம் வெய்யிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. கோவையில் வெப்பத்தின் தாகம் இந்த வருடம் அதிகரித்து உள்ளது கோவையிலே இப்படி என்றால் சென்னையை கேட்கவேண்டியதே இல்லை. உடல் சூட்டைத் தணிக்க இன்று எத்தனையோ குளிர்பானங்களும் மருந்துகளும், மாத்திரைகளும் வந்து விட்டன ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இத்தனை பானங்கள் எல்லாம் இல்லை அவர்கள் சூட்டைத்தனிக்க குடித்தது கம்மங்கூழ் தான்.

தமிழனின் பாரம்பரிய உணவு கம்மங்கூழ் என்று சொல்வதில் பல பெருமைகள் உண்டு. 20 ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு வீட்டிலும் நிச்சயம் கம்மஞ்சோறு இருந்திருக்கும். ஆனால் இன்று வீடுகளில் கம்மஞ்சோறு செய்வது மிகவும் குறைந்து விட்டது. இன்று விற்பனை பொருளாகிவிட்டது. இன்று நகர்புறமாகட்டும், கிராமப்புறமாகட்டடு ஒரு தள்ளு வண்டியில் இரண்டு பானைகளுடன் இருக்கும் அங்கு கம்மங்கூழ் விற்பனை தூள் பறக்கின்றது. கம்மங்கூழ்க்கு தொட்டுக்க மாங்காய், குடல், வத்தல், அன்னாசிப்பழம், மோர் மிளகாய் இன்னும் ஏரியாவிற்குத் தகுந்த மாதிரி நிறைய இருக்கும் இதை சாப்பிடும் போதே உடல் குளுமையாக இருக்கும்.

என் நினைவில் சிறு வயதில் வீட்டில் பாட்டி ஊருக்கு வந்தார்கள் எனில் கம்பு இடித்து கம்மஞ்சோறு செய்து அதை பானையில் வைத்து அடுத்த நாள் காலை கொஞ்சம் தயிர் சேர்த்து கரைத்துக் கடித்தால் அதன் சுகமே தனிதான். நிறைய பேர் இதை அனுபவித்து இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

  • கம்மங்கூழ் சாப்பிடுவதால் உடல் சூடு தனியும்
  • குடல் நோய்களுக்கு வராமல் பாதுகாக்கும்
  • உடல் வலிமை சேர்க்கும்
கம்மஞ்சோறு

கம்மஞ்சோறு செய்து அதனுடன் முருங்கைகீரை குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். கம்மஞ்சோறு செய்து இரவில் தண்ணீர் ஊற்றி வைத்து காலையில் கொஞ்சம் தயிர் சேர்த்து குடிக்க வேண்டும் இத்துடன் கொஞ்சம் வெங்காகயம் சேர்த்து குடிக்க வேண்டும்.

நண்பர்களே இப்போது கம்மங்கூழ் விற்கும் இடத்தில் சுகாதாரக்கேடு நிறைய இருக்கும் அதனால் வீட்டில் செய்து சாப்பிடுங்கள் இது உடல் நலத்திற்கான அருமையான உணவு என்பதில் மாற்று கருத்து இல்லை.
    இன்னும் பல நன்மைகள் இருக்கும் என நினைக்கிறேன். இக்கோடையில் கம்மங்கூழ் சாப்பிட்டு வெப்பத்தை தணியுங்கள்....

    Tuesday, March 9, 2010

    முதலுதவி


    முதலுதவி ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்து இருக்கவேண்டிய ஒன்று. சமீபத்தில் நான் ஒரு பத்திரிக்கையில் படித்துக்கொண்டு இருக்கும் போது வெளிநாட்டில் பள்ளியிலேயே முதலுதவி பற்றிய விவரங்களை குழந்தைகளுக்கு சொல்லித்தருகிறார்களாம். நம்ம ஊரிலும் சொல்லித் தருகிறார்கள் ஆனால் முறையாக அதை சொல்லித்தருவ தில்லை முதலுதவி ஒவ்வொரு விபத்திற்கும் வித்தியாசப்படும் தீக்காயத்திற்கு ஒரு மாதிரியும், பாம்பு கடித்தால் ஒரு மாதிரியும், வலிப்பு வந்தால் ஒரு மாதிரியும் வித்தியாசப்படும் எல்லாமே எல்லாருக்கும் நிச்சியம் தெரிய வாய்ப்பு குறைவு. முதலுதவியைப் பற்றி நான் படித்து அறிந்தவற்றை விட என் வீட்டு பெரியவர்களிடமும், பக்கத்து வீட்டு நண்பர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டது தான் அதிகம்.

    நாம் இருக்கும் இடத்தில் எந்த மாதிரியான நோய்கள் வரும் அவ்வாறு வந்தால் மருத்துவமனைக்குச் செல்லும் முன் நாம் செய்ய வேண்டிய முதலுதவி என்ன என்று நாம் அறிந்திருந்தால் இழப்புகளை தவிர்க்கலாம். அதற்கு முன் நாம் செய்யும் முதலுதவி சரியா என்றும் அறிந்திருக்க வேண்டும்.

    நான் 7ம் வகுப்பு படிக்கும் போது நடந்த சம்பவம் நான் எனது நண்பர்களுடன் கில்லி விளையாடிக்கொண்டு இருக்கும் போது கில்லி என் தலையில் பட்டு நெத்தியில் ஆழமாக காயம் ஏற்பட்டது நான் அழுது கொண்டே வீட்டிற்கு வரும் போது பக்கத்து வீட்டு அக்கா காபித்தூளை கொண்டு வந்து என் நெற்றியில் அமுத்திவிட்டார் அப்போதைக்கு ரத்தம் நின்றது பின்பு மருத்துவரிடம் சென்றபோது இது தவறு இதனால் புண் பெரிதாகத்தான் வாய்ப்பு இருக்கிறது என்று காபித்தூளை சுத்தம் செய்து 3 தையல் போட்டு அனுப்பி வைத்தார். அப்போது இருந்து எங்கு சிறு காயம் ஏற்பட்டாலும் அதை அப்படியே ஒரு ஈரத் துணி வைத்து கட்டினால் ரத்தம் நிற்கும் பின்பு மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை பெறவேண்டும் என இன்று வரை செய்து வருகிறேன்.

    வெட்டுக்காயங்களுக்கான முதலுதவி

    1. காயம்பட்ட இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாக கழுவிவிட வேண்டும்.
    2. இரத்தம் நிற்கும் வரை அழுத்தம் கொடுக்க வேண்டும்.
    3. காயத்தைக் கட்டுவதற்று சுத்திகரிக்கப்பட்ட பேண்டேஜ் துணியை உபயோகப்படுத்த வேண்டும்.
    4. ஆழமான காயமாக இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

    சிறுகாயங்கள் மற்றும் சிராய்ப்புகள்

    1. வெதுவெதுப்பான நீரில் சோப்பினால் காயத்தினை நன்றாக கழுவ வேண்டும்.
    2. இரத்தக்கசிவு இருப்பின் சுத்தமான பேண்டேஜ் துணியினால் காயத்தினைக் கட்ட வேண்டும். இது காயத்தின் மீது தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கிறது.
    மாரடைப்பின் போது எடுக்கவேண்டிய முதலுதவி 

    பாதிப்பு ஏற்பட்ட நபரை படுக்க வைக்கவும், பின் அவரது நாக்கின் அடியில் ஆஸ்பிரின் மாத்திரையை, சோர்பிட்ரேட்(sorbitrate) மாத்திரயுடன் சேர்த்து வைத்து விடவும் (இருக்கும் பட்சத்தில்). உடனே தாமதிக்காமல் இதய சிறப்பு மருத்துவரிடம் கூட்டி செல்லவும். பெரும்பாலான பாதிப்புகள் முதல் ஒரு மணி நேரத்திலேயே ஏற்படுகிறது.

    தீக்காயங்களுக்கான முதலுதவி
    1. ஒரு குழந்தையின் துணியினை தீ பற்றிக் கொண்டால், விரைவாக கம்பளம் அல்லது பிற துணியினால் அக்குழந்தையை சுற்றியோ அவர்களை தரையில் உருட்டியோ தீயை அணைக்க வேண்டும்.
    2. தீக்காயம் ஏற்பட்ட இடத்தை உடனடியாக குளிர்விக்க வேண்டும். நிறைய குளிர்ந்த, சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். தீக்காயம் பெரியதாக இருந்தால், குழந்தையை குளிர்ந்த நீர் உள்ள குளிக்கும் தொட்டி அல்லது பேசினில் வைக்க வேண்டும். இச்செய்கையானது தீக்காயமடைந்த இடத்தை குளிர்விக்க 30 நிமிடம் வரை எடுத்துக் கொள்ளலாம்
    3. தீக்காயமடைந்த இடத்தை சுத்தமாகவும் மற்றும் வறட்சியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். கட்டுத்துணியினால் தளர்ந்த நிலையில் கட்டி பாதுகாக்க வேண்டும். தீக்காயமானது நாணையத்தைவிட பெரியதாக இருந்தாலோ அல்லது கொப்புளங்கள் ஏற்பட்டாலோ குழந்தையை சுகாதார பணியாளரிடம் எடுத்துச் செல்ல வேண்டும். கொப்புளங்களை உடைக்கக் கூடாது, அவை காயம்பட்ட இடங்களை பாதுகாக்கிறது.
    4. தீக்காயத்தில் ஒட்டியுள்ள எந்த பொருளையும் நீக்கக்கூடாது. குளிர்ந்த நீரைத்தவிர எந்த ஒரு பொருளையும் தீக்காயத்தில் போடக்கூடாது.
    5. குழந்தைக்கு பழச்சாறு அல்லது உப்பு மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீர் போன்ற திரவ உணவுகளைக் கொடுக்க வேண்டும்
    மின்சாரபாதிப்புக்கான முதலுதவி
    1. ஒரு குழந்தை மின்சாரத்தில் அகப்பட்டுக் கொண்டால், அல்லது மின்சாரத்தினால் தீக்காயம் ஏற்பட்டால், குழந்தையை தொடுவதற்கு முன்னர் மின்சாரத்தினை நிறுத்த வேண்டும். குழந்தை சுயநினைவினை இழந்தால், அதனை தகுந்த வெதுவெதுப்பான வெப்ப நிலையில் வைத்து, உடனடியாக மருத்துவ உதவியைப் பெறவும்.
    2. குழந்தைக்கு சுவாசிப்பது கடினமாக தோன்றினாலோ அல்லது சுவாசமின்றி இருந்தாலோ, அக்குழந்தையை சமமான பகுதியில் படுக்கவைத்து, அவள் அல்லது அவனின் தலையை இலேசாக பின்புறமாக சாய்க்க வேண்டும். குழந்தையின் நாசித்துவாரத்தை மூடிக்கொண்டு, வாயின் வழியாக சுவாசக் காற்றை ஊதவேண்டும். குழந்தையின் மார்பு விரியும் வண்ணம், போதுமானளவு சுவாசத்தை ஊத வேண்டும். மூன்று வரை எண்ணி மீண்டும் ஊத வேண்டும். குழந்தை சுவாசிக்க தொடங்கும் வரை இவ்வாறு தொடர்ந்து செய்ய வேண்டும்.

    மூச்சுத்திணறலுக்கான முதலுதவி
    1. பிறந்த குழந்தையோ அல்லது சிறுகுழந்தையோ இருமினால் தடுக்க வேண்டாம். அவள் அல்லது அவன் கிருமி பொருளை வெளியேற்ற விட்டுவிட வேண்டும். அப்பொருள் விரைவாக வெளியில் வராவிட்டால், குழந்தையின் வாயிலிருந்து அப்பொருளை எடுக்க முயற்சிக்கவும்.
    2. அப்பொருள் இன்னமும் குழந்தையின் தொண்டையில் அடைத்துக்கொண்டிருந்தால்,
    3. பிறந்த மற்றும் சிறுகுழந்தைளுக்கு
    4. தலை மற்றும் கழுத்தை தாங்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். முகம் தரையை நோக்கிய வண்ணம், கால்கள் இருக்கும் மட்டத்திற்கு சற்றே கீழாக தலை இருக்கும் வகையில் குழந்தையை திருப்பவும். முதுகில், தோள்பட்டைகளுக்கு இடையில், ஐந்து முறை தட்ட வேண்டும். பின்பு, குழந்தையின் முகத்தை மேலே நேராக நிமிர்த்தி, மார்பெலும்பின் மேல் மார்புக்காம்புகளுக்கிடையில் உறுதியாக ஐந்து முறை அழுத்த வேண்டும். வாயில்/தொண்டையில் சிக்கி இருக்கும் பொருள் வெயியில் வரும் வரை இதை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும். அப்பொருளை உங்களால் வெயியே எடுக்க முடியாவிட்டால், உடனடியாக குழந்தையை அருகில் உள்ள சுகாதார பணியாளரிடம் எடுத்துச் செல்லவும்.
    5. பெரிய குழந்தைகளுக்கு
    6. உங்கள் புயங்கள் குழந்தையின் இடுப்பைச் சுற்றிய வண்ணமாக குழந்தைக்குப் பின்புறமாக நிற்க வேண்டும். மடக்கிய கைமுட்டியை குழந்தையின் உடலில் தொப்புள் மற்றும் மார்புக் கூட்டிற்கு இடையில் வைத்துக் கொள்ள வேண்டும். மறுகையின் முட்டியை முதல் வைத்த கைமுட்டியின் மேல் வைத்து உள்வெளியாக ஐந்து முறை குழந்தையின் வயிற்றில் அழுத்த வேண்டும். தொண்டையில் அடைபட்ட பொருள் வெயியேறும் வரை இதை திரும்பத்திரும்பச் செய்ய வேண்டும். அப்பொருளை உங்களால் வெயியே எடுக்க முடியாவிடில், உடனடியாக குழதையை அருகிலுள்ள சுகாதாரப் பணியாளரிடம் எடுத்துச் செல்லவும்.
    தண்ணீரில் முழ்கினால்...

    ஒருவர் தண்ணீரில் நீச்சல் தெரியாமல் முழ்கிவிட்டால் முதலில் அவரைக்காப்பாற்ற தண்ணீரில் குதிக்கும் போது கொஞ்சம் தள்ளி குதித்து அவரைத்தொடாமல் அவரின் தலை முடியைத்தான் தூக்கவேண்டும் அவர் தண்ணீர் குடித்து மயங்கி இருப்பார். மேலே கொண்டு வந்து அவரை தலைகீழாக தொங்க விட்டு வயிரை அமுத்த வேண்டும் வயிற்றுக்குள் இருக்கும் தண்ணீர் எல்லாம் வெளியே வந்தவுடன் அவருக்கு மயக்கம் தெளிந்து விடும். தண்ணீரில் முழ்கியவரை காப்பாற்றும் போது நிதானம் அவசியம்.

    Friday, March 5, 2010

    உயிர் காக்கும் 108


    தமிழக அரசு எத்தனையே இலவச திட்டங்கள் அறிவித்து இருக்கின்றது ஆனால் இலவச ஆம்புலன்ஸ் 108 திட்டம் மிக மிக வரவேற்க கூடிய திட்டம் . இத்திட்டம் கலைஞர் ஆட்சிப்பொறுப்பு ஏற்றதும் அறிவித்து இருக்கவேண்டும் இன்னும் நிறைய உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்.
    எனது அனுபவம்
    நான் 8 வருடங்களுக்கு முன்பு சென்னையில் பணியாற்றிக்கொண்டு இருக்கும் போது வாலஜா சாலையில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு ஒருவர் இருசக்கர வாகனத்தில் விபத்துக்குள்ளானார். நானும் எனது நண்பனும் அவரை சென்ரல் எதிரே உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தோம் அந்த நல்ல விசயத்தை செய்ததற்கு பின்பு தான் நான் மிகவும் வேதனைப்பட்டேன். அங்கு வந்த காவல்துறை நண்பர் எப்படி நடந்தது என்ன என்று விசாரித்து விட்டு சென்றுவிட்டார், அடிபட்டவர் மயக்கம் தெளிந்து எழுந்ததும் காப்பாற்றி இங்கு கொண்டு வந்தது நாங்கள் தான் என்று கூறினோம் சரி நன்றி என்று சொன்னவர் அவரது பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டுவிட்டு நான் இரண்டாயிரம் ரூபாய் வைத்து இருந்தேன் இப்போது ஐநூறு தான் இருக்கிறது என்று பிரச்சனையை கிளப்பி விட்டார். முன்பு விசாரித்த காவல் துறை நண்பர் வந்து இவர்கள் தான் உன்னை காப்பாற்றினார்கள் அப்படி எடுத்திருந்தால் முழுவதும் தானே எடுத்து இருப்பார்கள் என்று அவர் எடுத்துக்கூறியும் அடிபட்டவர் இல்லை இவர்கள் தான் எடுத்து இருப்பார்கள் இவர்கள் மேல் கேஸ் போடுங்கள் என்றார் நன்றி உள்ள அடிபட்டவர் அப்புறம் எங்கள் அலுவலக மேனேஜர் வந்து அவர் சொந்த பணத்தை கொடுத்து எங்களை கூட்டிச்சென்றார் போகும் போது சொன்னார் இது கிராமம் இல்லை சென்னை இங்க இப்படித்தான் என்றார். அப்போது தான் தெரிந்து கொண்டேன் சென்னையில் யார் விபத்துக்குள்ளானாலும் அவர் அவர் அவர்களது வேலையைப்பார்த்துக் கொண்டு கண்டுக்காமல் செல்கிறார்கள் என்று இதற்குப் பெயர் தான் வேலியில் போறதை எடுத்து வேட்டியில் விட்டு குத்துதே குடையுதே என்று கூறுகிறோம்.

    கடந்த வாரம் நடந்த சம்பவம்
    கடந்த வாரம் நான் எனது மனைவி சகிதமாக ஊரிற்கு சென்று இருந்தேன். ஊரில் இருந்து பாவனி வரும் போது ஒரு இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் பெரிய குழியில் வண்டியை விட்டு நிலை தடுமாறி மரத்தில் மோதி கீழே விழுந்து இருந்தார் இது நடந்து மூன்றாவது நிமிடத்தில் நான் அந்த இடத்தில் காரை விட்டு இறங்கி பக்த்தில் ஒருவர் நின்று கொண்டு இருந்தார் அவரிடம் விசாரித்து விட்டு அவரை தூக்குங்க எனது காரில் மருத்துவமனை கொண்டு செல்லாம் என்றேன் வேண்டாம் சார் நான் 108க்கு சொல்லிட்டேன் அவர்கள் வந்து விடுவார்கள் என்றார் அவர்கள் எப்ப வர்றது ஒரு சிறு கூட்டம் சோந்துவிட்டது இல்ல சார் நாமே கொண்டு போகலாம் என்று அங்கு இருந்த பெரியவரிடம் சொல்லிக்கொண்டு இருக்கும் போது 108 வாகனம் சைரனுடன் போன் செய்த 7வது நிமிடத்தில் வந்து சேர்ந்தது, அவ்வாகனத்தில் முதல் உதவிக்கு என ஆட்கள் இருந்தனர். அவர்கள் இவர் யார் எந்த ஊர் என்று கேள்வி எல்லாம் கேட்கவில்லை வந்தார்கள் முதலுதவி செய்தார்கள் வாகனத்தில் ஏற்று மருத்துவமனை கொண்டு சென்றார்கள். நாங்களும் நிம்மதியாக கலைந்து சென்றோம்.
    ஒருவர் விபத்தில் அடிபட்டுக்கிடந்தால் இவ்வளவு நாள் நமக்கு ஏன் என்று இருப்பவர்கள் எல்லாம் 108க்கு போன் செய்து அடிபட்ட இடத்தை மட்டும் சரியாகச் சொன்னால் அவர்களை காப்பாற்ற 108 இருக்கிறது. இதுவரை இத்திட்டம் சரியாக செல்கிறது நான் விசாரித்தவரை யாரும் இத்திட்டத்தை குறை கூறவில்லை. அரசின் திட்டங்களுக்கு நிறையபேர் குறை கூறியிருந்தாலும் என்னைப்பொறுத்த வரை மிகவும் பாராட்டப்பட வேண்டிய திட்டம் இத்திட்டம்.
    எனது வேண்டுகோள்
    1. நண்பர்களே நீங்களும் வாகனத்தில் செல்லும் போது யரேனும் விபத்துக்குள்ளாகியிருந்தால் ஒரு போன் செய்தால் போதும் விபத்துக்குள்ளானவர் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது..
    2. அரசு ஒரு தொகுதிக்கு 5 வாகனங்களை கொடுத்தால் இன்னும் நிறைய விபத்துக்குளை தடுக்க வாய்ப்பு இருக்கிறது.

    Tuesday, March 2, 2010

    மாரடைப்பை விரட்டும் "விரதம்"

    இந்த ஒரு வார காலமாக வேலை பளு காரணமாக பதிவையும் படிக்கவில்லை பின்னூட்டமும் இடவில்லை. இன்று பதிவிற்கு வந்து ஒவ்வொரு நண்பர்களையும் படித்த உடன் தான் மனது நிம்மதி அளிக்கிறது. கடந்த வாரம் இரவு நண்பர் பிரபாகர் சிங்கையில் இருந்து அழைத்தார்.அவருடன் நெடு நேரம் பேசிக்கொண்டு இருக்கும் போது விரதத்தை பற்றி எழுதுங்கள் அதில் நிறைய நல்ல விசயங்கள் இருக்கின்றது என்றார் அதற்குப்பின் இதற்கான தகவல்களை சேகரித்து இப்பதிவை இடுகிறேன்.
    நம்ம ஊரில் பெண்கள் இன்று அதிகமாக விரதம் இருப்பதில்லை காரணம் அலுவல் பணிகாரணமாக விரதம் இருப்பதை தவிர்க்க முடியாமல் தவிர்க்கின்றனர். விரதம் இருந்தால் நல்லது என்ற காரணத்தினால் தான் அக்காலத்தில் நிறைய விரதங்கள் இருப்பதை பலர் இன்றும் பின்றபற்றுகின்றனர்.

    விரதம் இருப்பது எப்படி

    விரதம் ஒவ்வொருவ மதத்தினருக்கும் மாறுபடும் இந்துக்களில் விரதம் இருப்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எந்த ஆகாரமும் சாப்பிடமாட்டார்கள் பால், பழம் மட்டும் சாப்பிடுவார்கள். ஆனால் முஸ்லீம் மதத்தினர் நோன்பு என்ற பெயரில் உண்ணா நோன்பை கடைபிடிக்கின்றனர். இவர்கள் காலையில் இருந்து மாலை வரை எச்சில் கூட முழுங்காமல் கடுமையான உண்ணாநோன்பை கடை பிடிக்கின்றனர். இதனால் உடல் நலத்தின் பயன் மிக அதிகம்.
    மாதம் ஒரு முறை விரதம் இருந்தால் மாரடைப்புக்கான சாத்தியத்தை தவிர்க்கலாம் என இங்கிலாந்து விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
    இந்தியர்கள் மத்தியில் குறிப்பாக இந்து சமுதாயத்தினரிடம் வாரம் ஒருமுறை விரதம் இருக்கும் வழக்கம் பண்டைய காலம் முதல் உள்ளது. கடவுளின் பெயரால், பல்வேறு விசேஷ தினங்களின் பெயரால் இந்த விரதம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த விரதங்களுக்குப் பின்னால் மாபெரும் மருத்துவ பலன் உள்ளது தற்போது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    மாதம் ஒருமுறை விரதம் இருந்தால், மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும் என்பதுதான் இங்கிலாந்து விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும்.

    விரதம் இருப்பதன் காரணமாக உடலின் மெட்டபாலிசம் புதுப்பிக்கப் படுகிறது. உடலியக்கம் சீராகிறது, தனது பணிகளை புத்துணர்வுடன் உடல் உறுப்புகள் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

    இங்கிலாந்தைச் சேர்ந்த சால்ட் லேக் சிட்டியில் உள்ள உடா பல்கலைக்கழக பயோ மெடிக்கல் இன்பர்மேட்டிக்ஸ் துறையைச் சேர்ந்த டாக்டர் பெஞ்சமின் ஹார்ன் என்பவரது தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, லேட்டர் டே இயேசு கிறிஸ்து துறவிகள் சபையைச் சேர்ந்தவர் களிடம் இந்த ஆய்வை நடத்தியது.

    இந்த சபையைச் சேர்ந்தவர்கள் மாதம் ஒரு முறை விரதம் இருப்பது வழக்கம்.இவர்கள் விரதம் இருக்கும் நாட்களில் உடலியக்கம் சீராவதாகவும், ரத்த ஓட்டம் சீராவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதயம் சம்பந்தமான நோய்களும் இவர்களுக்குக் குறைவாகவே இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
    உண்ணாமல் இருந்தால் உடல்நலம் கெட்டுவிடும் என்ற பயம் பலருக்கு இருக்கிறது. உண்மையில் நோயற்ற ஒரு மனிதரால் 50 முதல் 75 நாட்கள் சாப்பிடாமல் உயிருடன் இருக்க முடியும். காரணம், மனிதஉடலில் இருக்கும் ஒவ்வொரு பவுண்டு கொழுப்பும் சுமார் 3,500 கலோரிகளுக்கு இணையானது.நீங்கள் கடுமையான உடற்பயிற்சி செய்தால்கூட கூடுதலாக ஒரு பவுண்ட் கொழுப்பு போதுமானது.
    உடனடியாக ஒரு மருத்துவரைக் கலந்தாலோசித்து, அவரது கண்காணிப்பின் கீழ் இதை மேற்கொள்வது நல்லது. உண்ணா விரதத்தை ஆரம்பித்த பிறகு, முதல் சில நாட்கள் மிகக் கடுமையானவை.  இந்த நாட்களில் பெரும் அளவிலான கழிவுப் பொருள்கள் உடலில் இருந்து ரத்தத்தில் கலக்கும். வியர்வைத்து வாரங்கள் உள்பட உடலின் எல்லா பாகங்களிலும் இருந்து இவை வெளியேறும். சில தடவைகள் சாப்பிடாமல் இருந்தால், நாக்கின் மீது வெண்ணிறப் படிவும் படிவது இதனால்தான்.

    உண்ணாவிரதம் இருக்க நினைத்தால்
    உண்ணா நோன்பு தொடரும்போது இந்த சுத்தப்படுத்தப்படும் பணி தீவிரமடையும். உடலில் இருக்கும் கொழுப்பு குறையும்.இறந்த செல்கள் வெளியேற்றப்படும். ஒருவர் பல நாட்கள் சாப்பிடாமல் இருக்கும்போது, உடலின்செல்களில் சேர்ந்திருக்கும் நச்சுப் பொருள்கள்கூட அகற்றப்படும். நோயுற்ற செல்கள்,இறந்த செல்கள், குடலின் உட்சுவரில் படிந்திருக்கும் அழுத்தமான திசு சுவர், ரத்தம், கல்லீரல்,சிறுநீரகம் ஆகிய பொருள்களில் இருக்கும் நச்சுப் பொருள்கள் உடலில் இருந்துவெளியேறும். உடலில் இருக்கும் நச்சுப் பொருள்கள் குறைந்ததும் ஒவ்வொரு செல்லின் திறனும்மேம்படும்.  இதனால், நோயுற்றஉடல் சீக்கிரம் குணமாகும். 
    கூர்மையாகக் கவனித்துப்பார்த்தால், உண்ணா நோன்பு இருப்பவர்கள் அதற்குப் பிறகு மிகவும் உற்சாகமாகவும்இருப்பார்கள். பசி எடுப்பதும் அவர்களுக்குக் குறைவாக இருக்கும்.இதற்குக் காரணம் இருக்கிறது. உணவைச் செரிக்க உடலுக்கு மிகுந்த சக்தி தேவைப்படுகிறது. உண்ணா நோன்பு இருக்கும்போதுஉடலின் செரிமான உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது.  இப்படி சேமிக்கப்படும் சக்தி உடலைச் சரிப்படுத்தும் பணிகளுக்குச் செலவிடப்படுகிறது. குடல் சுத்தம் செய்யப்படுவது, ரத்தம், செல்களில் இருக்கும் நச்சுப் பொருள்கள் வெளியேற்றப்படுவதாலும்உடல் பல கோளாறுகளிலிருந்து தன்னைச் சரி செய்து கொள்கிறது. உண்ணா நோன்பு இருந்தால்,உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கணிசமாக அதிகரிக்கும். உடல், மன நலம் அதிகரித்து உடம்பே புத்துணச்சி பெறும்.

    விரதம் இருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
    ஒரு நிபுணரின் மேற்பார்வையில் குறிப்பிட்ட காலத்திற்கு உண்ணா விரதத்தைமேற்கொண்டால் உடல் நலம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும்.
    1. நம்முடைய வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்வதன் மூலமாகவே பல்வேறு உடல் நலக் கோளாறுகளிலிருந்து விடுபடலாம்.
    2. காஃபீன், நிகோடின்,ஆல்கஹால் ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட உண்ணாநிலை மிகச் சிறந்தது.  இவற்றை நிறுத்துவதால் ஏற்படும் பின் விளைவுகள்,சாப்பிடாமல் இருக்கும்போது மிகக் குறைவாக இருக்கும்.
    3.  சாப்பிடாமல் இருப்பதால், கொழுப்புகுறையும்.
    4. குடலில் ஏற்படும்பல்வேறு குறைபாடுகளை உண்ணாநிலை சரி செய்யும்.
    5. மருத்துவரின் கண்காணிப்பின்கீழ் உண்ணா விரதம் மேற்கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.  அந்த காலகட்டத்தில் அவர்கள் தேவையான வாழ்க்கை முறைமாற்றத்தையும் டயட் மாற்றத்தையும் மேற்கொள்ளலாம்.
    6. உடலில் இருந்தும்ரத்தத்தில் இருந்தும் நச்சுப் பொருள்கள் வெளியேறுவதால் மனதில் சுறுசுறுப்பு அதிகரிக்கிறது.முடிவெடுக்கும் தன்மை கூர்மையடைகிறது.  குறைவாகச்சாப்பிடுவதால் சக்தி சேமிக்கப் படுகிறது. இந்த சக்தியை சிந்திக்கும் பணிகளுக்குப் பயன்படுத்துகிறது மூளை.
    மதரீதியாக இந்த உண்ணா விரதத்தைமேற்கொள்பவர்களுக்கு இரட்டை பயன்கள் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். அதாவது உடல்ரீதியான பலன்களும் மன ரீதியான பலன்களும். உலகில் பல நூற்றாண்டுகளாகவே இந்த உண்ணாவிரதப்பழக்கம் இருந்திருக்கிறது. அதனால்தான், பல மதங்களில் உண்ணாவிரதம் என்பது அந்த மதத்தின் வழிபாட்டிலேயே இருக்கிறது. இஸ்லாம், இந்து மதங்கள் இதைத் தீவிரமாக செயல்படுத்துகின்றன.