குளிர்காலம் முடிந்து இப்பொழுது வெய்யில் ஆரம்பித்து விட்டது. கோவையில் இருக்கும் நாங்களே மதிய வேளையில் வெளியில் செல்ல முடிாத அளவு வெப்பம் இருக்கிறது. சென்னையில் சொல்ல வேண்டியதே இல்லை அனேகமாக அங்கேயும் தொடங்கி இருக்கும் என நினைக்கிறேன். குளிர்காலத்திற்கும், வெய்யில் காலத்திற்கும் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டி இருக்கிறது. வெய்யில் காலத்தில் நாம் நம் உடம்பிற்கு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகளில் ஒன்று வெள்ளரிக்காய் இதன் மகத்துவம் நான் தெரிந்து கொண்ட வகையில் மிக அதிகம். அதை உங்களுட் பகிர்கிறேன் நீங்களும் பன் பெறுங்கள்...
வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காயை நம்மில் சாப்பிடாதவர்கள் சிலர் தான் இருப்பர். மிக குறைந்த விலையில் உடல்நலத்திற்கு ஏற்றது. வெள்ளரியை மூன்று வகையாக பிரிக்கலாம்.
பிஞ்சு வெள்ளரிக்காய்
பச்சையாக சாப்பிடுவதற்கு ஏற்றது. இதில் விதைகள் சிறிதாக இருக்கும் இதனால் சாப்பிடவதற்கு சுவையாகவும் இருக்கும். இதை சாப்பிடும்போது கொஞ்சம் உப்பு, மிளகாய்த்தூள், மிளகு தூள் கலந்து சாப்பிட்டால் இதன் சுவை சொல்லிமளாது. அப்படியே சாப்பிடுவதற்கு ஏற்றது இதுதான். வெள்ளரி வாங்கும் போது பிஞ்சு வெள்ளரியாக பார்த்துவாங்க வேண்டும்.
வெள்ளரிக்காய்
இது பிஞ்சுக்கும் அடுத்தநிலை. இதை குழம்பு வைக்க பயன் படுத்தலாம். இதை வைத்து பழ வகை குழம்பு வைக்கலாம். அதற்கான பதிவு நம் வலைப்பூவில் நிறைய இருக்கின்றது.
வெள்ளரிபழம்
வெள்ளரி நன்கு பழத்து இருக்கும் பெரியதாகவும் இருக்கும். பழத்தை ஜூஸ் செய்து சாப்பிட ஏற்றது. இல்லை எனில் நாட்டுச்சக்கரை கலந்து அதனுடன் பழத்தை சேர்த்து சாப்பிடலாம். வெப்ப காலத்தில் உடலுக்கு அதிக குளிர்ச்சியைத் தரும்.
வெள்ளரியின் பயன்கள்:
விட்டமின் ஏ, பொட்டாசியம் அதிகம் உள்ளது
- சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள், நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.
- வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய கருவளையம் நீங்கும்.
- வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும்.
- உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும்
மிக நல்ல தகவல்கள்.
ReplyDeleteதினசரி வெள்ளரி சேர்ப்பது வழக்கமே.
பிஞ்சு வெள்ளரி எங்கள் பக்கம் எப்போதாவதுதான் கிடைக்கிறது. மற்றது அதீத கசப்புடன் இருக்கிறது சமயத்தில். அப்படியான காயை உட்கொள்ள்க் கூடாதென்றும் சொல்கிறார்களே.
வெயில் காலங்களில் தக்காளியுடன் சாலட் செய்து சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
ReplyDeleteமுதல் படம் பார்த்தால் பாவக்காய் போலிருக்கிறது.
அருமை நண்பா!
ReplyDeleteஇங்கு சிங்கையில் எந்த பருவத்திலும் வெள்ளரி கிடைக்கும். காலை உணவு பிரட் ஸ்லைசில் வெள்ளரி, தக்காளி வைத்து கூட ஒரு ஆம்லெட் அவ்வளவுதான்...
சுவையான தகவல்கள்... கலக்குங்கள்.
பிரபாகர்.
வெள்ளரிக்காய் ரொம்ப விருப்பமானதுதான் எங்களுக்கும். நேற்று இங்கே சென்னையில் வெள்ளரிப்பிஞ்சுகள் கிடைச்சது. சுண்டுவிரல் பருமனில் இளம்பச்சை நிறத்தில் நீளநீளமாய் இருக்கு. சிலது சுருண்டும் வளைஞ்சும் வளர்ந்துருக்கு.
ReplyDeleteஎங்க பக்கம்(நியூஸியில்) வெள்ளரிக்காய்கள் 40 செ.மீ நீளத்துலே 5 செ.மீ குறுக்களவு வரை கிடைக்குது. ஒவ்வொன்னையும் தனித்தனியா ப்ளாஸ்டிக் உறைபோல பொதிஞ்சு கிடைக்கும். இதுக்குப்பெயர் 'டெலக்ராஃப் வெள்ளரிக்காய்'.
தந்திக்கும் இதுக்கும் சம்பந்தம் என்னன்னே தெரியலை. நானு 23 வருசமா யோசிக்கிறேன்!!!
தகவலுக்கு மிக்க நன்றி சங்கவி..:)
ReplyDeleteவெள்ளரி பச்சடி எனக்கு பிடித்த ஒன்று..:)
நல்ல பயனுள்ள தகவல்கள் சங்கவி .
ReplyDeleteவாங்க மீன்துள்ளியான்...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாங்க துளசிகோபால்...
ReplyDeleteநல்ல எனக்கு புதுதான தகவல் தந்ததற்கு நன்றி...
தந்திக்கும் வெள்ளரிக்கும் சம்பந்தம் இருக்கா..? இப்பதான சொல்லியிருக்கறீங்க..விரைவில் ஒரு பதிவ போட்டுவிடலாம்....
வாங்க ஷங்கர்...
ReplyDeleteவெள்ளரி பச்சடி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று நண்பா...
வாங்க பிரபாபர்...
ReplyDeleteஉண்மையிலேயே அருமையான காலை உணவு அது தான் நண்பா...
வாங்க சின்ன அம்மிணி..
ReplyDeleteவெள்ளரி கலந்த அனைத்து சாலட்டும் சுவையே... அந்த படம் பாவக்காய் போலத்தான் இருக்கிறது ஆனால் இது ஒரு வகை நாட்டு வெள்ளரிங்க...
வாங்க ராமலஷ்மி...
ReplyDeleteஆமாங்க 100 வெள்ளரிப்பிஞ்சுகள் விளையும் காட்டில் ஒன்றிரண்டு வெள்ளரிகள் கசக்கத்தான் செய்யும். அக்காய்களை உண்பதால் பின் விளைவுகள் எதும் இருக்காது ஆனால் உண்ணும் போது கசப்பு அதிகமாக இருப்பதால் துப்பிவிடுகிறோம்...
கோடைக்கு ஏற்ற பயனுள்ள தகவல் சங்கவி...
ReplyDeleteNice Tips. Expecting more from you with respect tackle Summer Session
ReplyDeleteநல்ல பயனுள்ள தகவல்..தொடருங்கள்..
ReplyDelete//அக்காய்களை உண்பதால் பின் விளைவுகள் எதும் இருக்காது //
ReplyDeleteஅப்போ சரி:)! நன்றி சங்கவி.
காலத்திற்கேற்ற நல்லதொருபதிவு.
ReplyDeleteவெள்ளரிக்காய் ரொம்ப பிடிக்கும். அதுவும் சாத்தூர் வெள்ளரிக்காய் தனி ருசி. தகவல்களுக்கு நன்றி.
ReplyDeleteநல்ல தகவல்கள்... நன்றி
ReplyDeleteவாங்க ராசு...
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
வாங்க தமிழரசி...
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
வாங்க அண்ணாமலையான் சார்...
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
வாங்க சித்ரா வாங்க....
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
வாங்க சொல்லரசன்...
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
வாங்க நாடோடி...
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
நல்ல குளிர்ச்ச்சியானத் தகவல்.... பாராட்டுக்கள்.
ReplyDeleteஆனா முதல் படத்தில் இருப்பது ”பாவக்காய்ங்க” இதுவும் சிங்கப்பூரில் எப்போதும் கிடைக்கும்.
தகவலுக்கு மிக்க நன்றி!!
ReplyDeleteகோடைக்கேற்ற பதிவு. தகவலுக்கு நன்றி
ReplyDeleteஇனி பலன் அறிந்து சாப்பிடுவேன் நண்பா.. தகவலுக்கு நன்றி சங்கவி..
ReplyDeleteவாங்க Menagasathia...
ReplyDeleteவாங்க அம்பிகா...
வாங்க திவ்யாஹரி...
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....
வாங்க கருணாகரசு...
ReplyDeleteமுதல் படத்தில் இருப்பது பாவக்காய் இல்ல நண்பரே... வெள்ளரிக்காய் தான் நண்பரே...
தினமும் இனி வெள்ளரி சேர்ப்பது உடலுக்கு நல்லது.. மிகவும் பயனுள்ள தகவல் சங்கவி..
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDeleteஎனக்கும் வெள்ளரி தயிர் பச்சடி பிடித்த ஒன்று சங்கவி தகவலுக்கு நன்றி
ReplyDeleteஉப்பு..மிளகாய்த்தூள் வேண்டாம்.. அப்படியே சாப்பிடுவேன் :-))
ReplyDeleteகடைசியாக வந்து பார்த்தாலும் குளிர்ச்சியான தகவல் எடுத்துப் போகிறேன் சங்கவி.
ReplyDelete